ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வை தொடர்ந்து 110 பேர் குமமொதோ சிறைச்சாலைக்கு மாற்றம்

Wednesday, April 20th, 2016

ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வை தொடர்ந்து 110 பேர் குமமொதோ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நில அதிர்வில் பாதிக்கப்பட்டவர்களை தடுத்து வைக்க இட பற்றாக்குறை காணப்பட்டதால் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இங்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை குறித்த சிறைச்சாலையில் 110 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் தேவைப்பட்டால் மேலும் சிலரை ஏற்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். குமமொதோ சிறைச்சாலை நீண்ட கால சிறைக்கைதிகளை தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Related posts: