ஜகார்த்தா வன்முறை மோதல் எதிரொலி: அதிபரின் அவுஸ்திரேலிய பயணம் இரத்து!

Saturday, November 5th, 2016

வெள்ளிக்கிழமையன்று தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயணத்தை இந்தோனீஷிய அதிபர் ஜோக்கோ விடோடோ இரத்து செய்துள்ளார்.

நாட்டிலுள்ள பாதுகாப்பு சூழ்நிலையால், விடோடோ நாட்டில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

காவல்துறையினருக்கும், பெரும்பாலும் அமைதியாக நடைபெற்ற பேரணிக்கு பின்னர் கலைத்து செல்ல மறுத்துவிட்ட முஸ்லிம் கடும்போக்குவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.இந்த மோதல்களுக்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என்று வெள்ளிக்கிழமை மாலையில் வழங்கிய தொலைக்காட்சி உரையில், விடோடோ குற்றம்சாட்டியுள்ளார்.

தெய்வ நிந்தனை குற்றச்சாட்டிற்காக ஜகார்த்தாவின் ஆளுநரை கைது செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.

_92281239_07e31b0d-a05e-4def-a747-87377470b7a0

Related posts: