சோமாலிய குண்டுத் தாக்குதலில் 230 பேர் பலி!

Monday, October 16th, 2017

சோமாலிய தலைநகர் மொகதிசுவில் லொரி ஒன்றில் கொண்டு வந்த வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்க செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்களில் 230 பேர் பலியாகியுள்ளதுடன் அதிகளவானொர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் முக்கிய அமைச்சகங்கள் அமைந்துள்ள பரபரப்பு நிறைந்த சாலைகளை இலக்காக கொண்டு நேற்று இந்த தாக்குதல் நடந்தப்பட்டுள்ளது.

எனினும் பெருமளவில் பொதுமக்களே பலியாகியுள்ளனர்இ காயமடைந்து மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Related posts: