செஷெல்ஸில் இருபது ஆண்டுகளில் முதல் முறையாக தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி!
Sunday, September 11th, 2016
செஷெல்ஸ் தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தசாப்த காலங்களில் முதல் முறையாக எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான எல்.டி.எஸ்-க்கு புதிய தேசிய பேரவையில் 15 இடங்கள் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ முடிவுகள் காட்டுகின்றன. இது அதிபர் ஜேம்ஸ் மைக்கேலின் மக்கள் கட்சியை விட 5 இடங்கள் அதிகமாகும்.
இந்திய பெருங்கடலில் இருக்கும் இந்த தீவுக் கூட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி தான் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.. முடிவு அறிவிக்கப்படும் முன்னரே, புதிதாக அமையும் பேரவையோடு இணைந்து பணிபுரிய தயாராக இருப்பதாக அதிபர் மைக்கேல் அறிவித்துள்ளார்.

Related posts:
ஜி.எஸ்.டி. சிறப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தார் நிதிஷ்குமார்
கடும் வெயில் : பிரான்சில் 1400 பேர் பலி!
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் - ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்க...
|
|
|


