சுவர் இடிந்து விழுந்ததில் பாகிஸ்தானில் 9 குழந்தைகள் பலி!

Saturday, October 13th, 2018

பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குலாம் சர்வார் ஷம்பானி கிராமத்தில் உள்ள மண் வீட்டின் அருகில் 4 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் சிலர் நேற்று விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மண் வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சுவர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இந்த விபத்தில் 7 பெண் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: