சீரற்ற வானிலை – சீனாவில் 33 பேர் உயிரிழப்பு!
Wednesday, August 9th, 2023சீனாவின் தலைநகர், பீஜிங்கில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இதுவரை 18 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தும் சீரற்ற வானிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்- 15 வீரர்கள் பலி!
குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு!
கொங்கோவின் கிளர்ச்சி தலைவருக்கு யுத்த குற்றங்களிற்காக 30 வருட சிறைத்தண்டனை - மீண்டும் உறுதி செய்தது ...
|
|