சீனா சென்றார் இந்தியப் பிரதமர்!

Saturday, April 28th, 2018

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி  சீனாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் பிரதமராகிய பின்னர் சீனாவிற்குச் செல்வது நான்காவது தடவையாகும். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உயர்மட்ட உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வருகை தருமாறு சீன தலைவருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்

அத்துடன் தோக்லாம் எல்லை பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் வூஹான் நகரில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

குறித்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையேயான ராஜதந்திர உறவுகள் வலுப்பட்டுள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts: