சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!
Thursday, April 16th, 2020
சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது. அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி சில நோயாளிகள் வீடு திரும்பியதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட அந்த தற்காலிக மருத்துவமனை தற்போதைக்கு இடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ரயில்வே சீரமைப்புக்கு புதிய திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவிப்பு !
மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் - பொதுமக்களுக்கு தொல்பொருள் திணைக்களம் அறிவுறுத்து!
குறுங்கால தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் இன்றுமுதல் தடை - மத்திய சுற்...
|
|
|


