சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் தாக்குதல்!
Sunday, October 8th, 2017
சவுதி ஜித்தா நகரில் உள்ள அல் சலாம் மன்னர் மாளிகையின் ஆரம்ப நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
சவுதி அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் இதனை உறுதிசெய்துள்ளன. இந்த தாக்குதலில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவந்த பாதுகாப்பு படையினர் மீது ஆயுததாரி ஒருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின்போது இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மரணித்ததுடன், 3 பேர் காயமடைந்தனர்.இதனை அடுத்து பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய பதில் தாக்குதலில் தாக்குதல்தாரி சம்பவ இடத்திலேயே மரணித்தாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல்தாரி 28 வயதான சவுதி பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Related posts:
மலையில் மோதிய பயணிகள் விமானம் : 7 பேர் பலி!
பேருந்து விபத்து: இறந்த மாணவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்வு!
இலண்டன் மசூதியில் மர்ம நபர் கத்தி குத்து தாக்குதல்!
|
|