சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் மாயம்!

Wednesday, January 25th, 2023

தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடல் எல்லையில் சரக்குக் கப்பல் கவிழ்ந்ததில் 8 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதன்போது 14 பேர் காப்பாற்றப்பட்டதாக ஜப்பான் கடலோர காவல்படையின் செய்தி தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொங்காங்கில் பதிவு செய்யப்பட்ட 6 ஆயிரத்து 651 தொன் எடை கொண்ட இந்த கப்பலில் 14 சீன பிரஜைகள் மற்றும் 8 மியான்மார் பிரஜைகள் உள்ளிட்ட 22 பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

Related posts: