கோபத்தை மறந்து அனுதாபம் தெரிவித்த புடின்!

Thursday, June 30th, 2016

இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக  செய்திகள் கூறுகின்றன.

கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர். மேற்கூறிய விமான தாக்குதல் சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜிய உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் துருக்கியின் மீது ரஷ்யா பொருளாதார தடை விதித்தது.

துருக்கி அதிபர் எர்துவான் , ரஷ்யாவிடம் தங்கள் நாட்டின் சார்பாக முறையான மன்னிப்பை வெளியிட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு திங்கள்கிழமையன்று மேம்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts: