கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார நடைமுறைகளை கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதியுடன் முரண்பாடு – பிரேசில் சுகாதார அமைச்சர் இராஜினாமா!
Sunday, May 17th, 2020பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் ( Nelson Teich) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசிலில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரேசிலில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துவர, அந்நாட்டில் ஜிம்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அதிபர் ஜெயீர் போல்சீனாரோ உத்தரவு பிறப்பித்ததை, சுகாதாரத்துறை அமைச்சர் நெல்சன் டைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையிலேயே அந்நாட்டின் சுகாதாதரதுறை அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மலேஷிய படகு விபத்து 14 சடலங்கள் மீட்பு!
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது!
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது மனித குலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!
|
|