கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலை ஆரம்பம்!
Monday, May 22nd, 2017கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 250 மெகா வோட் மின் உற்பத்தி வெளியாகும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவோட் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டன. இதில், கடந்த ஏப்ரல் மாதம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது அணு உலையில் கடந்த ஐந்தாம் திகதி டர்பன் வால்வு திடீரென பழுது ஏற்ப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்திகள் நிறுத்தப்பட்டிருந்தன.தற்போது அதன், திருத்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் வாடகை வீட்டில் 400 முதலைக் குட்டிகள்!
ஜெயலலிதா மரணம் : மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ!
சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடிப்பு - 26 பேர் உடல் கருகி பலி!
|
|