குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோர்களுக்கு அபராதம்!

Sunday, May 28th, 2017

ஜேர்மனி நாட்டில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாத பெற்றோர்களுக்கு 2,500 யூரோ வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மனியின் சுகாதார துறை அமைச்சரான Hermann Grohe என்பவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், ‘தட்டம்மை போன்ற நோய்கள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருவதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருப்பது மற்றும் அதற்கான மருத்துவ ஆலோசனைகளை பெறாமல் இருக்கும் பெற்றோர்களுக்கு 2,500 யூரோ வரை அபாரதம் விதிக்கப்படும்.ஜேர்மனியில் உள்ள எஸ்சான் நகரில் 3 குழந்தைகளுக்கு தாயாரான ஒருவர் தட்டம்மை நோயிற்கு பலியாகியுள்ளதை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இச்சட்டம் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதுமட்டுமில்லாமல் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மழலையர் பள்ளிகளுக்கு செல்லும் பெற்றோர்களிடம் தடுப்பூசி போட்டதற்கான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளில் ஒன்றான இத்தாலியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாவிட்டால் அவர்களை அரசு பள்ளியில் சேர்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற சட்டம் கடந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: