கார்க்குண்டுத் தாக்குதல்: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு !

Saturday, June 24th, 2017

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட கார்க்குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு 15 பேர் காயமடைந்துள்ளனர்.

அவ்வாறு உயிரிழந்தவர்களுள் பொலிஸார் நால்வர் உள்ளடங்குவதாகவும்இ காயமடைந்த 15 பேரில் 09 பேர் பாதுகாப்பு அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் குறித்த காரை சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட போதே இந்த கார்க்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இது முற்றிலும் பொலிஸாரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்க்குண்டுத் தாக்குதலில்  வெடித்துச் சிதறிய குறித்த காரில் வெடிபொருட்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் தாக்குதல்தாரி அதனை வெடிக்கச் செய்தே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனவும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த பலுசிஸ்தான் தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related posts: