காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதக்குழு- மேற்குலக படையினர் மோதல் – ஒருவர் பலி!

Monday, August 23rd, 2021

காபுல் விமானநிலையத்தில் இனந்தெரியாத ஆயுதகுழுவிற்கும் மேற்குலக படையினருக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.

ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமானநிலையத்தில் காணப்படுகின்ற நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.

ஆப்கானை சேர்ந்த விமானநிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் மூவர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனந்தெரியாத ஆயுதகுழுவிற்கும் அமெரிக்க ஜேர்மன் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

Related posts: