வியட்நாமில் வெள்ளம்: 26 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 8th, 2017

வடக்கு வியட்நாமை தாக்கிவரும் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக் கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இயற்கை பேரழிவினால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களானது 41 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அரச அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இயற்கை அனர்த்தத்தில் சுமார் 15 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தினால் வீதிகள் சேதமடைந்துள்ளமை மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் அவர்களை தேடும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் வகையில் வீதிகள், நீர் அமைப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை சீரமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ கட்டுப்பாட்டு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: