கலிபோனியாவில் காட்டுத்தீ : கட்டுப்படுத்த திணறும் தீயணைப்புப் படை!

Monday, July 30th, 2018

கலிபோனியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயானது மேலும் தீவிரமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த மாநிலத்தின் எட்டு இடங்களில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

வறட்சியான காற்றின் காரணமாக தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை நிலவுகிறது.

ஆயிரக்கணக்கான தீயணைப்பு படையினர், தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தற்போது தீ பாரிய அளவில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீயினால் உயிரிழந்த நான்காவது நபரின் சடலம் நேற்று மீட்கப்பட்டிருந்தது.

Related posts: