கடும் சூறாவழி: நேபாளத்தில் இருவர் பலி, 100 பேர் காயம் !
Saturday, June 8th, 2019
நேபாத்தை தாக்கியுள்ள சூறாவளியால் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 100 பேர் வரை காயமடைந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
சூறாவளி காரணமாக நேபாளில் கைலாலி மற்றும் காஞ்சனூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கைலாலி மாவட்டத்தில் சூறாவளியால் 77 பேர் காயமடைந்துள்ளதுடன், காஞ்சனூர் மாவட்டத்தில் 23 பேரும் காயமடைந்துள்ளனர்.மரங்கள் முறிந்துள்ளமை காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Related posts:
பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !
கொரோனோ வைரஸ் எதிரொலி: பயணத்தடை விதித்த அவுஸ்திரேலியா!
இந்து ஆலயங்களை பாதுகாக்க பலமான அமைச்சு வேண்டும் - உலக இந்துக் குழு இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!
|
|
|


