கடந்த வருடம் எகிப்து நாட்டில் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் விபரம்!
Tuesday, February 13th, 2018
கடந்த வருடம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் எகிப்து நாட்டின் மசூதி ஒன்றில் இருந்த 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் 3 மாதங்களில் தீவிரவாதிகளை ஒழிக்கும்படி ராணுவத்துக்கு கடந்த நவம்பரில்உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் சினாய் தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் இடங்களை குறி வைத்து எகிப்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில் 60 தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேசிய மாலுமிகள் 4 பேர் துப்பாக்கிதாரிகளால் கடத்தல்!
மனைவியின் தொலைபேசியை சோதனையிடும் ஆண்களுக்கு சிறை! சவுதி இளவரசர் !
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!
|
|