ஐ.நா. அழைப்பை நிராகரித்தது ஆயுதக்குழு!
Saturday, October 8th, 2016
சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து வெளியேறுவதற்கு ஐ.நா. விடுத்த அழைப்பை இஸ்லாமியவாத ஆயுதக்குழுவினர் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக அல் கையீதாவுடன் இணைந்திருந்த நுஸ்ரா முன்னணி படைப்பிரிவுகளின் 900 ஆயுதக்குழுவினருக்கு அவர் இந்த அழைப்பை விடுப்பதாக ஐநாவின் சிரியா தூதர் ஸ்டாஃபான் டி மிஸ்துரா தெரிவித்திருந்தார்.அவர்கள் பின்வாங்குவதாக இருந்தால், அலெப்போவின் கிழக்குப் பகுதியில் ரஷியாவின் ஆதரவோடு சிரியாவின் அரசுப் படையினர் தொடுக்கும் தாக்குதலை நிறுத்தலாம் என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால், அலெப்போவில் அதனுடைய படைப்பிரிவுகள் இறப்பதற்கு தயாராக இருப்பதாகவும், கௌரவக் குறைவான சரணடைதல் இருக்காது என்றும் இந்தக் குழுவின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.

Related posts:
இத்தாலியில் மறு கட்டுமான பணிகளுக்கு ஒன்பது பில்லியன் டாலர் செலவாகும் என மதிப்பீடு!
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
வேகமாகப் பரவி வரும் நிபா வைரஸ் – கேரளா மாநிலம் முழுவதும் முடக்கப்படுமா என மக்கள் அசச்சம்!
|
|
|


