எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோள்!

Tuesday, March 21st, 2017

தான் இசையமைத்த பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக்கூடாது என இளையராஜ நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என பாடகர் பாலசுப்பிரமணியம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை பெரிதுபடுத்தவேண்டாம் இதோடு விட்டுவிடுங்கள். நடப்பது வருத்தமளித்தாலும், அதை ஊடகங்கள் சர்ச்சையாக்கவேன்டாம் என தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: