எவரையும் விரும்பாத 5,53,000 பேர்!

Friday, May 20th, 2016

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ‘நோட்டா(NOTA)’விற்கு சுமார் 5,53,000 பேர் வாக்களித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய லக்கானி, ‘சட்டமன்ற தேர்தல் எவ்வித வன்முறையும் இன்றி நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க விரும்பதவர்கள் நோட்டாவில் சுமார் 5,53,000 பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சில தொகுதிகளின் முடிவுகள் வெளியாக தாமதமாவதற்கு காரணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, தமிழகம் முழுவதும் 183 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளதாகவும், எஞ்சிய 49 தொகுதிகளின் முடிவுகள் அடுத்த 45 நிமிடங்களுக்குள் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தொகுதியில் வாக்குகளை எண்ணுவதில் சில பிரச்சனைகள் உள்ளதால், அதன் முடிவுகளும் சிறிது நேரத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும்.

குறைவான வாக்கு வித்தியாசம் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்தால் அங்கு தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

Related posts: