எம்மை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொன்னுட்டாங்க ! புழல்  கைதியின் வாக்குமூலம்!!

Wednesday, September 28th, 2016

புழல் சிறையில் கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்த ராம்குமார் மரணத்தில் நாளுக்கு நாள் சர்ச்சை நீடித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் புழல் சிறையில் இருக்கும் மற்ற கைதிகளை அடைத்து வைத்துவிட்டு ராம்குமாரை கொலை செய்து விட்டதாக  புழல் சிறை கைதி ஒருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் வார இதழ் ஒன்று நடத்திய விசாரணையில் புழல் சிறையில் ராம்குமாருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதி ஒருவர்  வழக்கமா 5 மணியிலிருந்து 5:45 மணிக்குத்தான் எங்களை செல்லுக்குள்ள வெச்சு பூட்டுவாங்க. ஆனா, அன்னைக்கு திடீர்னு வந்த வார்டன்கள் “உள்ள போ……உள்ள போ…’ன்னு’ 3:45 மணிக்கே பூட்டிட்டாங்க.

என்னமோ நடக்கப்போகுதுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தோம். சுமார் 4:30 மணி இருக்கும். ஒரே கூட்டம். ராம்குமாரை ஸ்ட்ரெச்சர்ல வெச்சு டிஸ்பென்சரியை நோக்கித் தள்ளிக்கிட்டுப் போனாங்க.

கொஞ்சநேரத்துல, ராம்குமார் கரண்ட் ஒயரை கடிச்சு செத்துட்டான்னு சிறை முழுக்க நியூஸ் பரவ ஆரம்பிச்சுடுச்சு. எங்களைப் பூட்டி வச்சிட்டு அந்தப் பையனை முடிச்சிட்டாங்க என்றும் அந்த கைதி  தெரிவித்துள்ளதாக அந்த வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ராம்குமார் கொலையான அடுத்த தினத்திலிருந்து மூன்று நாட்கள் எப்பொழுதும் வழக்கமாக வரும் தினத்தந்தி  செய்திதாள் கூட வரவில்லை என்றும் மேலும் மூன்றாவது நாள் வந்த செய்தி தாளிலும் ராம்குமார் மரணம் குறித்த செய்திகள் அனைத்தையும் கிழித்துவிட்டு தான் போலீஸார் செய்திதாளை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

suvate-2

Related posts: