கொரோனா தாக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை மீள ஆராயப்படும் – உலக சுகாதார அமைப்பு தெரிவிப்பு!

Saturday, April 18th, 2020

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சீனாவைப் போலவே உலகின் ஏனைய நாடுகளிலும் குறித்த வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மீள கணக்கெடுத்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உற்பத்தி நகரான வுஹானில் இற்தவர்களின் எண்ணிக்கையானது மீள கணக்கெடுப்பின் படி 1290 ஆக அதிகரித்ததோடு இது அந்நகரின் 50 சதவீத அதிகரிப்பு எனவும் நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய கணக்கெடுப்பன் பிரகாரம் வுஹானில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது 3,869 என்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: