எண்ணெய்த் தாங்கி கப்பல்களை தாக்கியதும் ஈரானே – அமெரிக்கா குற்றச்சாட்டு!

Friday, June 14th, 2019

ஓமான் குடாவில் இரண்டு எண்ணெய்த் தாங்கி கப்பல்கள் ஈரானினாலேயே தாக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் தன்மை குறித்த புலனாய்வு பகுப்பாய்வின் அடிப்படையில், ஈரானே இந்த தாக்குதலை நடத்தியமை தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரானின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், இந்த தாக்குதலுக்கும், ஈரானுக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார். ஐக்கிய அரபு ராச்சியக் கடலில் சில வாரங்களுக்கு முன்னர் சவுதிக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதன் போதும் ஈரான் மீதே அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: