எகிப்து எயார் விமானத்தில் குண்டுப்புரளி!
Thursday, June 9th, 2016
எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்து எயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது
118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330–-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப் பட்டுள்ளது
தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை
3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து கெய்ரோ நகருக்கு 66 பேருடன் பயணித்த எகிப்து எயார் விமானமொன்று மத்தியதரைக்கடலில் மர்மமான முறையில் விழுந்து மூழ்கியிருந்தது
Related posts:
இலண்டன் கத்திக்குத்தில் ஒருவர் பலி!
எனக்குரிய காலம் விரைவில் வரும்! - தீபா
பிலிப்பைன்ஸ் தலைநகரத்திற்கு ஒரு மாத காலம் பூட்டு!
|
|
|


