உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
Tuesday, April 23rd, 2019ஈரானிடமிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் துருக்கி ஆகிய 5 நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட சலுகையை இரத்து செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
குறித்த 5 நாடுகளுக்கும் வழங்கப்பட்டிருந்த சலுகையானது எதிர்வரும் மே மாதத்துடன் காலாவதியாகுவதாக, வெளள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த முடிவு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியத்திற்கு கொண்டுவருவதற்கான நோக்கமாக இருக்கின்ற அதேநேரம், அரசாங்கம் தனது முக்கிய ஆதார வருவாயை மறுத்து வருகின்றது.
இதனையடுத்தே, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
Related posts:
பிரிட்டிஷ் அரசியின் 90 ஆவது பிறந்தநாள்!
பிரித்தானியாவை பூர்விகமாகக் கொண்ட மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு!
மு.க. ஸ்டாலின் கைது!
|
|