உலகை உலுக்கிய அமெரிக்க 9/11 தாக்குதலில் சவுதிக்கு தொடர்பு : குற்றவாளி திடுக்கிடும் தகவல்!

Tuesday, July 30th, 2019

உலகையே உலுக்கிய அமெரிக்காவின் உலக வர்த்தக மைய 9/11 தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்து திட்டமிட்டு செயலாற்றியதாக கூறப்படும் குற்றவாளி, அமெரிக்கா அவருக்கு எதிராக மரண தண்டனையை கோரவில்லை எனில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சவுதி அரேபியாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் தான் சாட்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

9/11 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக சவுதி அரேபியாவுக்கு எதிராக பலியானவர்களின் குடும்பங்கள் வழக்குக்கு தொடங்கியபோது, நியூயார்க்கில் வெள்ளிக்கிழமை, 9/11 தாக்குதலுக்கு மூளகர்த்தாவாக செயல்பட்ட காலித் ஷேக் முகமதுவின் முன்மொழிவு வெளிப்பட்டது.

உலக வர்த்தக மையத்தில் கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்ற 2001 தாக்குதல்களை ஒருங்கிணைக்க சவுதி அரசு உதவியதாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதல்களில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று சவுதி மறுத்துள்ளது.

கியூபாவின், குவாண்டனாமோ வளைகுடாவில் சிறையில் உள்ள பயங்கரவாத தாக்குதல்களை ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து கைதிகளில் மூன்று பேரை வழக்கறிஞ்ர்கள் தொடர்பு கொண்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பாக அவர்களை நேர்காணல் செய்ய தொடர்பு கொள்ளப்பட்டதாக கூறினர்.

நியூயார்க்கில் உள்ள அமெரிக்கா மாஜிஸ்திரேட் நீதிபதி சாரா நெட்பர்னுக்கு வந்த கடிதத்தின்படி, தற்போது வாக்குமூலத்திற்கு அவர் சம்மதிக்க மாட்டார் என்று முகமதுவின் ஆலோசகர் வழக்கறிஞர்களிடம் கூறினார்.

ஆனால், முகமதுவின் இந்த முடிவு வழக்கு விசாரணையின் மூலதன இயல்பு என்றும், மரண தண்டனை இல்லாதிருந்தால் அவரின் ஒத்துழைப்பு சாத்தியமாகும் என்றும் வழக்கறிஞர் கூறினார்.

53 வயதான முகமதுவை சிஐஏ மற்றும் பாகிஸ்தான் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் 2003 மார்ச் 1 அன்று பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் கைப்பற்றின. பின்னர் சந்தேக நபர் ஆப்கானிஸ்தான் மற்றும் போலந்தில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் விசாரிக்கப்பட்டார்.

டிசம்பர் 2006-ல், அவர் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

9/11 குண்டுவெடிப்பின் பின்னணியில் செய்லபட்டதாக அவர் விரைவில் ஒப்புக்கொண்டார், இதில் பிரிட்டிஷ் ரிச்சர்ட் ரீட் ஷூ குண்டுவெடிப்பு ஒரு விமானத்தை வெடிக்க முயற்சித்தது, இந்தோனேசியாவில் பாலி நைட் கிளப் குண்டுவெடிப்பு, 1993 உலக வர்த்தக மைய குண்டுவெடிப்பு, டேனியல் பேர்ல் கொலை என பல குற்றங்கள் அடங்கும்.

Related posts: