உத்தரப்பிரதேசத்தில் இருபிரிவினர் இடையே மோதல் மூவர் உயிரிழப்பு!

Friday, September 16th, 2016

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரில் இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதில் மூவர் உயிரிழந்து உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பிஜ்னோர் மாவட்டம் பேடா கிராமத்தில் காலை 8 மணியளவில் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு ஒருபிரிவை சேர்ந்த வாலிபர்கள் தொந்தரவு கொடுத்து உள்ளனர். இதனை அப்பகுதியாக சென்ற ஒருவர் தட்டிக் கேட்டு உள்ளார். அவரை வாலிபர்கள் தாக்கிஉள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் நடந்த சம்பவத்தை மற்றொரு பிரிவிடம் கூறிஉள்ளார். இதனையடுத்து அங்கு இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார், கிராமத்திற்கு விரைந்தனர். இதற்கிடையே மோதலில் மூவர் பலியாகினர்.

மேலும் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரது நிலை மோசமாக உள்ளது, அவர்கள் மாவட்ட உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மோதலின் போது தீ வைப்பு சம்பவமும் அரங்கேறிஉள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. போலீஸ் டிஜிபி எஸ் ஜாவீத் அகமது பேசுகையில், நிலையானது கட்டுக்குள் உள்ளது, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்றார்.

Untitled-1 copy

Related posts: