ஈராக்  குண்டு வெடிப்பு தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

Thursday, January 18th, 2018

தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈராக் தலைநகரில் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக் தலைநகர் மத்திய பக்தாத் ஏடன் சதுக்கத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனை சாவடியைக் குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டுதாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 65 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கைஅதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்

Related posts: