ஈராக்கில் இரட்டைக் குண்டு தாக்குதல்; 22 பேர் பலி!
Friday, June 10th, 2016ஈராக்கிய தலைநகர் பக்தாத்தில் வர்த்தக நிலையங்கள் நிறைந்த வீதி மற்றும் இராணுவ சோதனைச்சாவடி என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 70 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பாக்தாத்தில் அல் ஜடீடா பிராந்தியத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் நிறைந்த வீதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரொன்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலில் குறைந்தது 15 பேர் பலியானதுடன் 50 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பாக்தாத்தின் வடக்கே தாஜி எனும் இடத்தில் காரொன்றைச் செலுத்தி வந்த தற்கொலைக் குண்டுதாரி நடத்திய இரண்டாது தாக்குதலில் குறைந்தது 7 பேர் பலியானதுடன் 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் நிறைந்த வீதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியுள்ளனர்.
இரண்டாவது தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமைகோரவில்லை.
ஈராக்கிய படையினர் பலுஜ்ஜாஹ் நகரிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றப் போராடி வருகின்ற நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
|
|