இலங்கை அகதிகள் இருவர் பலி 17 பேர் படுகாயம்  – மெசடோனியாவில் சம்பவம்!

Wednesday, June 27th, 2018

மெசடோனியாவில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

கிழக்கு மெசடோனாவின் சுயனழஎளை-ளுவip சழயன என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மெசடோனியாவில் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அகதிகளை ஏற்றிச்சென்ற வாகனம் இரும்பு பாலம் ஒன்றில் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் உயிரிழந்த இருவரும் எந்த நாட்டினர் என்று அடையாளம் காணப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts: