இறுதிக்கட்ட நிர்மாணப்பணியில் அப்துல்கலாம் மணிமண்டபம்!

Wednesday, July 5th, 2017

இராமேஸ்வரத்தில் அமைக்கப்படும் அப்துல்கலாம் மணிமண்டபத்தின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் மணி மண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜுலை மாதம் 27ம் திகதி திறந்துவைக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சொந்த ஊரான இராமேஸ்வரத்தின் பேக்கரும்பு பகுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனை முன்னிட்டு அங்கு மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: