இராணுவ முற்றுகைக்குட்பட்டு இருக்கும் மக்களை வெளியேற்ற நடவடிக்கை!
Saturday, April 15th, 2017
சிரியாவில் இராணுவத்தினரின் முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் பகுதிகளில் இருக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மற்றும் கிளர்ச்சயாளர்கள் இந்த நடவடிக்கையின் ஊடாக வேறு இடத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவில் ஜனாதிபதி பஷதர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக ஆயுத போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் மோதல் நடைபெற்று வரும் இருதரப்பிற்கும் இடையில் மக்களை வெளியேற்றுவது தொடர்பிலான உடன்படிக்கை ஏற்பட்டதையடுத்து முற்றுகைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
குறித்த தகவலை பிரத்தானியாவை மையமாக கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி ஷியா இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் அல் பஃவ்வா மற்றும் கெப்ரயா பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக பேருந்துகளின் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
Related posts:
|
|