இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலகல்: சூடானில் தொடர்ந்தும் பதற்றம்!

Monday, April 15th, 2019

சூடானில் மக்களாட்சி கோரி போராட்டம் வலுப்பதால் பெரும் பதற்ற நிலைக்கு மத்தியில் சூடான் இராணுவ ஆட்சித் தலைவர் பதவி விலதெரிவிக்கின்றன.கியுள்ளதாக அந்நாட்டு செய்திகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சூடான். அங்கு கடந்த 1993-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் திகதி முதல் அதிபராக உமர் அல் பஷீர் (வயது 75) பதவி வகித்து வருகிறார்.

இவர் உள்நாட்டுப் போரின் போது, போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு பதிவாகி, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த இந்நிலையில், சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்த நாட்டின் இராணுவ மந்திரியாக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11-ந் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆட்சியை கவிழ்த்த சூட்டோடு சூடாக அவாத் இப்ன் ஆப், இராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் ராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றார். இவர் உள்நாட்டுப் போரின் போது, இராணுவ உளவுத்துறை தலைவர் பதவியும் வகித்தவர் ஆவார். இதையொட்டி அவர் மீது 2007-ம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

ஆட்சியை கவிழ்த்த நிலையில், சர்வதேச கோர்ட்டில் வழக்கு இருந்தாலும், உமர் அல் பஷீர் நாடு கடத்தப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2 ஆண்டுகள் இராணுவ ஆட்சி தொடரும், அதன் பின்னர் தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இராணுவ ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பெருமளவில் போராட்டங்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த திருப்பமாக இராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப், தான் பதவி விலகி விட்டதாகவும், இராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டம் நடத்தி வருகிறவர்கள் கூறுகின்றனர். போராட்டங்களும் வலுத்து வருகின்றன.

இதன் காரணமாக சூடானில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related posts: