இந்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு: தனித்து விடபட்ட பாகிஸ்தான்!

Wednesday, October 5th, 2016

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை பாகிஸ்தான் மட்டுமே குறை கூறி வருகிறது. ஆனால் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரவித்து வருகின்றன.

உலக நாடுகள் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பிரச்கைளை கூர்ந்து கவனித்து வருகின்றன. இதில் பாகிஸ்தான் எல்லை மீறி நடந்து வருவதை உலகின் பல நாடுகள் கவனித்து வருவதுடன் பாகிஸ்தான் அத்துமீறி நடந்துகொள்வதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

பதான்கோட் தாக்குதலை போல பல தாக்குதல்களை பொறுத்துக்கொண்டு பதிலுக்கு தாக்குதல் நடத்தாமல் இந்தியா பொறுமை காத்தது. இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உரி தாக்குதலில் இந்தியா பொறுமை இழந்து எதிர் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்து வருகிறது. சீறி எழுந்த இந்தியா ஒரே சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதுடன், 8-க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்த்தது.

இந்த ஒரு தாக்குதலையே தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான் கதறிக் கத்துகிறது. எத்தனை தாக்குதல்களை பொறுமையுடன் தாங்கி வந்தது என்பதை மறந்துபோனது. தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் திரும்பியுள்ளது. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகள்,அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன்,பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் தற்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சீனா கூட நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகள் கூட அதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.
இனிமேலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் சர்வதேச சமூகத்தில் இருந்து தனித்துவிடப்படும் நிலை வரும். அந்நாட்டில் நடக்க வேண்டிய சார்க் மாநாட்டை நடத்த முடியாமல் போனதுடன் பல நாடுகள் மாநாட்டை புறக்கணித்தது பாகிஸ்தானுக்கு தக்க பாடமாக அமைய வேண்டும்.

489px-Gopuramgold

Related posts: