இந்தியா பலவீனமான நாடல்ல – சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் என ராஜ்நாத் சிங் தெரிவிப்பு!
Friday, March 8th, 2024இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுக்கு நாம் நினைவுட்டுகிறோம் எனவும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புதிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஜேர்மனி தயார்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – அமெரிக்காவில் ஒரே நாளில் 1321 பேர் பலி!
உணவுப் பொருட்கள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக சீனி விநியோகிக்க நடவடிக்கை - வர்த்தக அமைச்சு தெரிவிப்ப...
|
|