இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா ஒரே நாளில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா!

Saturday, May 8th, 2021

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாகவும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 இலட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2 இலட்சத்து 34 ஆயிரத்து 83 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 76 இலட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தற்போது 36 இலட்சத்து 45 ஆயிரத்து 164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: