இந்தியாவின் மிக நீளமான பாலம் திறப்பு!
Tuesday, December 25th, 2018
இந்தியாவின் போகிபீல் என்ற மிக நீளமான பாலம் பிரதமர் நரேந்திர மோடியினால் இன்று அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்படவுள்ளது.
5900 கோடி இந்திய ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம், 4.9 கிலோமீற்றர் நீளமானது.
பிரம்மபுத்ரா நதிக்கு மேலாக செல்லும் இந்த பாலம், திப்ருகார் மற்றும் தெமாஜி ஆகிய இரண்டு மாவட்டங்களை இணைக்கின்றது.
இதன் மூலம் குறித்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 170 கிலோமீற்றர் பயணத் தூரம் மேலும் குறைவடைவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே குறித்த பாலத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் 1997ஆம் ஆண்டு நாட்டப்பட்ட போதும், நிர்மாணப் பணிகள் இந்த ஆண்டே நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முதலாவது செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மரணம்!
உலக நாடுகளில் அசுத்தக் காற்றை சுவாசிப்பதால் 90 வீதமான உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன!
சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளார்!
|
|
|


