ஆயுதக் குழுவின் வசம் பாலஸ்தீன பாடசாலைகள் – ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!
Monday, August 21st, 2023
பாலஸ்தீனில் காணப்படும் பாடசாலைகளை அந்தநாட்டு ஆயுதம் ஏந்திய குழுவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு வன்முறையின்போது அவர்கள் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், உடனடியாக அந்த பாடசாலைகளை விட்டு வெளியேறுமாறு, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு போரினால் லெபனானில் அதிகமான பாலஸ்தீனியர்கள் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வறட்சியான காலநிலை தொடரும் - வளிமண்டல திணைக்களம் !
இலங்கைத் தீவை அச்சுறுத்துகின்றது கொரோனா - ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! (கொரோனா த...
இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|
சேவை அத்தியவசியத்தின் அடிப்படையில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடம...
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின...
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பொருட்களின் விலைகள் குறைவு - கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸ...


