ஆப்கானிஸ்தானில் பாரிய தாக்குதல் – 100 பேர் பலி!
Tuesday, January 22nd, 2019
ஆப்கானிஸ்தானின் மைடான் வர்தாக் மாகாணத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டு வரும் இராணுவம் மற்றும் பொலிஸாரை கொண்ட சிறப்புப்படை அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தின் வாசலில் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் குண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டவாறு சிறப்பு படை அலுவலகத்துக்குள் ஊடுருவ முயன்றனர்.
அவர்களுக்கும் சிறப்புப்டை காவலர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருதரப்பிலும் 100 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுமார் 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெறும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
|
|
|


