ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்- 15 வீரர்கள் பலி!

Monday, November 2nd, 2020

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பக்தியா மாகாணம், ரொகானா பாபா மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தபட்டது.
சோதனைச்சாவடியில் குண்டு வெடித்து சிதறியதில் 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Related posts: