அமெரிக்க விமான தாக்குதலில் :11 சிறுவர்கள் உள்பட 56 பேர் பலி!
Thursday, July 21st, 2016
சிரியாவில் மக்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.அமைப்பு ஈராக், சிரியா ஆகிய நாடுகளை கைப்பற்றி இஸ்லாமிய நாடாக அறிவித்தது. இதன் காரணமாக அவர்களிடமிருந்து ஈராக், சிரியா நாடுகளை காப்பாற்ற அமெரிக்கா, மற்றும் நட்பு நாடுகளும் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
மேலும் ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் உள்ள சிரியாவின் அலெப்போ மாகாணத்தை கைப்பற்ற அமெரிக்கா கூட்டு படைகள் தாக்குதல் நடத்த முடிவு செய்தனர்.
அமெரிக்க கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தும் போது ஐ.எஸ் அமைப்பினர் உள்ள இடத்தை நோக்கி குண்டுகள் வீசினர், அது மாறுதலாக பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்துவிட்டது.
Related posts:
பிரச்சனைகளை மிகவும் வெளிப்படையாக பார்க்க டஸ்க் அழைப்பு!
11 விமானங்களின் சேவைகளுக்கு உடனடித் தடை!
இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து - 17 பேர் பலி - 50க்கும் அதிகமானோர் ...
|
|
|


