அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!
Friday, April 30th, 2021அமெரிக்க படை வீரர்கள் 100 பேர் இராணுவ தளபாடங்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர்.
கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க படையினரை திரும்பப் பெறப்போவதாக அறிவித்திருந்தார். இதற்கமையவே முதற்கட்டமாக படை வீரர்கள் 100 பேர் விமானம் ஊடாக அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பிரித்தானியக் கடலில் உயிரிழந்த 5 தமிழர்களின் மரணத்தில் சந்தேகம்!
பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது!
தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்!
|
|