அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு – 10 பேர் பலி!

Tuesday, March 23rd, 2021

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.
கடந்த வாரம் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் வாலிபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். இது அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்தார். அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கி இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபர் காயங்களுடன் கைது செய்ப்பட்டுள்ள நிலையில், அவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் ஊடகங்கள் கருத்த தெரிவித்துள்ளன.

Related posts: