அமெரிக்காவின் யோகா மையத்தில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி!
Saturday, November 3rd, 2018
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள யோகா மையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தாலாஹஸ்ஸி நகரத்தில் உள்ள தாமஸ்வைல் சாலை மற்றும் பிராட்ஃபோர்ட் சாலை சந்திப்பில் செயல்பட்டு வரும் யோகா மையத்தில் மர்ம நபர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த மர்ம நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் பலத்த காயங்களுடன் 5 பேரையும் மீட்டு தாலாஹஸ்ஸி நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. சாலைகள் மூடப்பட்டது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னர் ஒக்.27ஆம் திகதி பிட்ஸ்பர்க்கில் ராபர்ட் போவர்ஸ் என்பவர் நடத்திய சரமாரித் துப்பாக்கிச்சூட்டில் சம்பவ இடத்திலேயே 11 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts: