600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்

Saturday, July 21st, 2018

ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை வழங்கியதாக மத போதகர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோவில் அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்ததாகவும், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது கானாவில் எந்த பகுதியில், எப்போது நடந்தது என்ற தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார். தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: