அணு ஆயுத சோதனை நிலையங்கள்அழிப்பு : தென்கொரியாவிற்கு அனுமதி!

Thursday, May 24th, 2018

வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நிலையங்கள் அழிப்பு செய்தி சேகரிக்க, தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் தென்கொரிய பன்முஞ்சோமில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர்.இந் நிலையில், வட கொரியாவின் புங்யே-ரி அணு ஆயுத சோதனைகூடம் நாளைக்குள் அழிக்கப்படலாம் என கூறப்படுகிறது.இதுபற்றி செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ள முதலில் வடகொரியா அனுமதி வழங்கவில்லை.அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவ கூட்டு பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சியோல் உடனான தொடர்பையும் வடகொரியா துண்டித்தது.இந்நிலையில், தென்கொரியாவின் 8 பத்திரிகையாளர்கள் கொண்ட பட்டியலுக்கு வடகொரியா அனுமதி வழங்கி உள்ளது. அவர்கள் வடகொரியாவுக்கு சிறப்பு விமானம் மூலம் செல்லவுள்ளனர். மற்ற பத்திரிகையாளர்கள் நேற்றே சென்று விட்டனர்.

Related posts: