அமெரிக்காவின் செயற்பாடு சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானது -ஈரான்

Friday, August 4th, 2017

ஈரான் மீது பொருளாதார தடைவிதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்தமையானது, மனித உரிமைகள் கொள்கைகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகளுக்கு முரணானதாகும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா சுமத்தியுள்ள புதிய பொருளாதார தடைகளுக்கு கடும் கண்டனம் வெளியிட்ட அவர், 2015ஆம் ஆண்டு செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறும் வகையிலான அமெரிக்காவின் செயற்பாட்டை தாம் சகித்துக் கொள்ள போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதிக்க தீர்மானித்து, இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து அது நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: